சென்னையில் நடைபெற்ற சிற்றில் குறும்பட விழாவில் அகனள் குறும்படம் முதல் பரிசை தட்டி சென்றது. அகனள் குறும்படம் எதைபற்றி பேசுகிறது? அகனள் குறும்படம் திருநங்கைகளுக்கு விளையாட்டில் அங்கீகாரம் வேண்டும் என்பதே இக்கதையின் கருவாக இப்படம் உருவாகியுள்ளது. குறும்படத்தை தயாரித்து நடித்த விக்ரம் விஜய் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் குறும்பட விழாவை தலைமையேற்று சிற்றில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் திரு. பிரபு ஷங்கர் சாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் தலைமை தாங்கிய திரு. தேனப்பன் தயாரிப்பாளர்&நடிகர், திரு. கோபிநாத் விகேஇ பிலிம் நிறுவனர், திரு. லெனின் பாபு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மற்றும் இயக்குனர், திருமதி. தீபிகா, டெண்ட்கோட்டா ஓடிடி, நடிகர் சரத்ரவி ஆகியோர் இவ்விழாவினை சிறப்பித்துள்ளனர். அகனள் குறும்படம் டெண்ட்கோட்டா ஒடிடி தளத்தில் விரைவில் வெளியிட உள்ளனர். குறும்பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து இயக்குநர்களுக்கும் எங்கள் குறும்படம் சார்பாக வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!